Content Status

Type

Linked Node

Content

காச நோயாளிகளை தொடர்ந்து கண்காணித்தல்:-

  • காசநோய் சிகிச்சையின் பலனை அறிந்துகொள்வதற்கு, சிகிச்சையின் ஒவ்வொரு நான்கு வாரங்களின் முடிவிலும் காசநோயாளிகள் மருத்துவ ரீதியாக மதிப்பீடு செய்யப்படுவார்கள், மேலும் ஒவ்வொரு காச நோயாளிகளுக்கும் தீவிர சிகிச்சை காலத்தின் இறுதியில் சளி பரிசோதனை செய்வதன் மூலம் அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறார்கள். 
  • முதல் நிலை மருந்துகளுக்கு எதிரான பக்க விளைவுகளை அடையாளம் காண கண்காணிக்கப்படுகிறார்கள்.
  • ஏதேனும் சார்பு நோய் உள்ளதா என கண்டறியவும் நோயாளியின் எடையில் ஏதேனும் மாற்றங்கள் உள்ளதா என்பதை கண்டறியவும், கண்காணிக்கப்படுகிறார்கள்.
  • காசநோயாளிகள் தொடர்ந்து சிகிச்சை எடுப்பதை கண்காணிக்கவும் மேலும் நோயாளிகளுக்கு அவ்வப்போது ஏற்படும்                      அறிகுறிகளை கவனிப்பதன் மூலம் சிகிச்சை சிறப்பாக பலன் அளிக்கிறதா என்பதை தீர்மானிக்கவும், கண்காணிக்கப்படுகிறார்கள்.
  • தீவிர சிகிச்சை காலம் முடிந்த பிறகு இரண்டு மாதங்களுக்குப் பிறகும் அறிகுறிகளில் ஏதும் மாற்றம் தென்படாத போதும் அறிகுறிகளில் மாற்றம் ஏற்பட்டு பிறகு அறிகுறிகளில் தீவிரத் தன்மை ஏற்படும் போதும் பன் மருந்து எதிர்ப்பு திறன் ஏதும் ஏற்பட்டுள்ளதா என்று பரிசோதனை செய்வது மிகவும் அவசியமாகும்.
  •  

Content Creator

Reviewer